புலியை தனது மொபைல் காமராவினால் வீடியோ எடுக்க முற்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நிகழ்ந்த கதி தான் இது... திடீரெனப் பாய்ந்து புலிகள் தாக்கியதால் தனது வாழ்க்கையையே இழக்கும் அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார் இந்தப் பள்ளி ஆசிரியர்.முதலில் கையைக் குறி வைத்த தாக்கிய புலிகள் அப்படியே கையைப் பிடுங்கி விட்டது. படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்..
காட்டில் வாழும் புலிகளை சிறிய கூண்டில் அடைத்து வைப்பதால் ஏற்படும் விளைவே இது என்று வன விலங்கு பாதுகாவலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.





